இலங்கை

மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மீட்பு

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன. 

பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…