இலங்கை

ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி இன்று முதல் அதிகரிப்பு!

சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை 01  ஆம் திகதி முதல்  அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி அல்லது வாடகைக்காக ஒவ்வொரு 1,000 ரூவாவிற்கும் அதன் ஒரு பகுதிக்காகவும் 10 ரூபாய் முத்திரை கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது.

எனினும், குறித்த முத்திரை கட்டணம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 20 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி  நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முத்திரை வரி மீளமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…