இலங்கை

ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி இன்று முதல் அதிகரிப்பு!

சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை 01  ஆம் திகதி முதல்  அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி அல்லது வாடகைக்காக ஒவ்வொரு 1,000 ரூவாவிற்கும் அதன் ஒரு பகுதிக்காகவும் 10 ரூபாய் முத்திரை கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது.

எனினும், குறித்த முத்திரை கட்டணம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 20 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி  நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முத்திரை வரி மீளமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…