இலங்கை

மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 

ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சென்று மீண்டும் திரும்பி முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகள் சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இருவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

விபத்தில் ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…