இலங்கை

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளது. 

இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நடைபவனி கொழும்பு பொது நூலக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, காலை 7.30 மணி முதல் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் மருத்துவ முகாம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த அனைத்துச் செயல்பாடுகளும் இலவசமாக இடம்பெறவுள்ளதாக இலங்கை நீரிழிவு சம்மேளனம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…