இலங்கை

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் இன்று (14) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்று ஆரம்பமாகியது. 

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 

மு.ப. 10.00 – மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள். 

மு.ப. 10.30 – மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 

மு.ப. 11.00 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஆறாவது நாள்). 

பி.ப. 6.00 இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…