இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் அந்த மார்க்கங்களில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், வடக்கு ரயில் மார்க்கம் வெல்லவ பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதால் வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் ரயில் மார்க்கத்திலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், சீரற்ற வானிலை காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை – பதுளை இடையே இயங்கும் அனைத்து ரயில்களையும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நானுஓயா வரை மட்டுமே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…