இலங்கை

இந்திய மீனவர்கள் மூவர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…