இலங்கை

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதி – 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் இடமொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போதே அந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டியில் உள்ள காலி வீதியில் உள்ள இடமொன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து வரி இல்லாத சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…