இலங்கை

கடற்கரை மார்க்க ரயில் சேவைகள் பாதிப்பு!

கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை – கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தண்டவாளத்தில் லொறி சிக்கியுள்ளதால், குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து காரணமாக சுமார் 5 அலுவலக ரயில்கள் தற்போது தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொடை பொலிஸ் தெரிவித்துள்ளது. 

தண்டவாளத்தில் சரிந்துள்ள லொறியை அகற்றி, ரயில் மார்க்கத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…