No products in the cart.
‘டித்வா’ முன்னாயத்தம் இன்மை: பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கோரிப் பிரேரணை
‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்குப் போதிய முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது குறித்த தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் இந்தப் பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியினால் அது வழிமொழியப்பட்டது.
















