இலங்கை

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்விபத்து இன்று (13) மாலை கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியில், சென்கிளையார் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. 

கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும், தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இதில் கொட்டகலை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

விபத்தினால் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…