இலங்கை

பாலத்திலிருந்து பாய்ந்த கெப் வாகனம்!

மொனராகலை – பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அருகில் கெப் ரக வாகனம் ஒன்று பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும், பாலத்திற்கும், அத்துடன் மொனராகலை நகருக்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாய் கட்டமைப்புக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

விபத்துத் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…