இலங்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு!

இலங்கையில் நிலவும் மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரடைந்து பயணம் மீண்டும் தொடங்கும் வரை தினமும் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முயற்சியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம்
மற்றும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…