இலங்கை

தென் கடலில் மீட்கப்பட்ட போதைப்பொருள்!

இலங்கை கடற்படையினரால் அண்மையில் நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் இருந்து 654 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த போதைப்பொருள் தொகையுடன் அந்த மீன்பிடி படகு நேற்று (12) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, 600 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 48 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மொத்தம் 654 கிலோகிராம் போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. 

அவற்றில் 478 கிலோகிராம்​ைஐஸ் போதைப்பொருள் எனவும், ஏனைய 176 கிலோகிராம் ஹெரோயின் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…