உலகம்

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் 6 சீனர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் சிகரெட் தொகை ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வந்த 6 சீனப் பிரஜைகள் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று (16) அதிகாலை மூன்று வெவ்வேறு விமானங்களின் ஊடாக நாட்டை வந்தடைந்த இந்த சீனப் பிரஜைகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக ‘அத தெரண’ விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதியின் பெறுமதி ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…