இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் உட்பட இருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (18) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச் சலவை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள முறைப்பாட்டாளருக்கு, மார்ச் மாதத்திற்காக வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு காசோலையை விடுவிப்பதற்காக இந்த 30,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…