இலங்கை

சைபர் குற்றங்கள் தொடர்பில் மேலும் பல வெளிநாட்டு பிரஜைகள் கைது!

காலி துறைமுகம், மாகல்ல மற்றும் சம்போதி சந்தி ஆகிய பகுதிகளில் கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காலி துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட இந்திய மற்றும் நேபாள நாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்களிடமிருந்து 10 கணினிகள் மற்றும் 32 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…