இந்தியா

தரங்கெட்ட ஆள் நான் இல்லை – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அளவுக்கு தரங்கெட்ட ஆள் நான் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது; தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவின.


என்னைப் பற்றி பரவிய விமர்சனங்களுக்கு நான் விளக்கம் தரவில்லை என்றால் அது உண்மை என்றாகிவிடும். மு.க.ஸ்டாலின் எனது 40 ஆண்டு கால நண்பர், அரசியல் கடந்து அவருடன் எனது நட்பு தொடர்கிறது.


சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்றது வருத்தமாக உள்ளது. விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அளவுக்கு தரங்கெட்ட ஆள் நான் இல்லை. விஜய் வென்றவுடன் வாழ்த்து தெரிவித்துவிட்டேன். விஜய்யையும் தன்னையும் ஒப்பிடுவது தவறானது.


விஜய் வென்றதால் பொறாமை இல்லை. விஜய் தனியாக வென்றதில் எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், சமூக வலைதளங்கள் போன்றவை முக்கிய பங்காற்றின. விஜய்யின் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். நான் கட்சி தொடங்கி இருந்தால் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றிருப்பேன் என்று கூறினார்.



What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…