இலங்கை

NPP உறுப்பினரின் கார் மோதி விபத்து – இருவர் காயம்

தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

விபத்து இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியே காரைச் செலுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய, விபத்துத் தொடர்பாகக் காரின் சாரதி ஹினிதும பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…