இலங்கை

NPP உறுப்பினரின் கார் மோதி விபத்து – இருவர் காயம்

தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

விபத்து இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியே காரைச் செலுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய, விபத்துத் தொடர்பாகக் காரின் சாரதி ஹினிதும பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…