இலங்கை

வனவாஸல ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரள்வு

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பெட்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அவர் கவிழ்ந்த ரயில் பெட்டிக்கும் ரயில் மார்க்கத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கியதால் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

விபத்து காரணமாக கீழ் ரயில் மார்க்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல்க ரயில் மார்க்கம் மற்றும் மூன்றாவது ரயில் மார்க்கம் ஆகியவற்றில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாகவும் சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

விபத்து நடந்த இடத்திற்கு தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…