இலங்கை

சுரேஷ் சலேயின் மனைவி, CID பணிப்பாளருக்கு அவசர கடிதம்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, 

தமது கணவர் சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமது கணவரை, தமக்கும், தமது பிள்ளைக்கும் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தனது கணவர் சார்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணிகளுக்கு, அவரைச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்குமாறு அவர் அக்கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தனது கணவர் தற்போது மேற்கொண்டு வரும் ஆபத்தான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு அவரை ஊக்குவிக்க, சட்டத்தரணிகளின் சந்திப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என மனோரி சலே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்தத் தீர்மானமிக்க இக்கட்டான தருணத்தில் தனது கணவருக்கு மருத்துவச் சிகிச்சை மட்டுமன்றி, சட்ட ரீதியான மற்றும் மன ரீதியான ஆதரவும் மிகவும் அத்தியாவசியமானது என்றும் அவர் அந்த கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…