இலங்கை

இறக்குமதி செய்யப்படவிருந்த உப்பு நாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம்

இறக்குமதி செய்யப்படவிருந்த உப்பு நாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இதேவேளை தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படவிருந்த 2,800 மெற்றிக் தொன் உப்பு ஆகியவற்றைக் கொண்ட 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக உப்பு இறக்குமதி சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும் அதன் பிறகு உப்பு தொடர்ந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…