கனடா

காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று கனேடிய மாகாணங்கள்

கனேடிய மாகாணங்கள் மூன்றில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிவருகிறார்கள்.

கனடாவின் மனித்தோபா, ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மூன்று மாகாணங்களில் காட்டுத்தீ பற்றியெரிகிறது.

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களிலுமாக சுமார் 25,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகபட்சமாக, மனித்தோபாவில் சுமார் 17,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணத்தில் சுமார் 8,000 பேரும் ஆல்பர்ட்டாவில் சுமார் 1,300 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

காட்டுத்தீ காரணமாக கனடாவிலும், கனடா எல்லையிலுள்ள சில அமெரிக்க மாகாணங்களிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புகை சூழ்ந்தும் காணப்படுவதால் சாலைகளில் பயணிக்க இயலாத நிலையும் உருவாகியுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை, மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் காட்டுத்தீ பரவும் காலகட்டமாகும்.

என்றாலும், 1990களுக்குப் பிறகு, காட்டுத்தீ காரணமாக இவ்வளவு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…