இலங்கை

சபாத் மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் தங்கள் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், உணவு மற்றும் பானங்களைப் பெறவும் நிறுவப்பட்ட சபாத் மையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பல பொலிஸ் பிரிவுகளில் நிறுவப்பட்ட சபாத் மையங்களுக்கு நிலவும் அச்சுறுத்தலுக்கு அமைய 24 மணி நேர பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வசிக்கும் எந்தவொரு வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கும் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், இலங்கை பொலிஸ் அதை மதிப்பிட்டு தேவையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…