இலங்கை

வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் மரணம்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 59 வயது வைத்தியர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…