இலங்கை

வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் மரணம்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 59 வயது வைத்தியர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…