இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் 09 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (06) 9 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த. தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான. மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…