விளையாட்டு

இந்திய ஏ அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஷ்

அவுஸ்திரேலிய ஏ அணியுடன் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 

15 பேர் கொண்ட இந்திய குழாம் தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ள நிலையில், இந்த தொடருக்கு ஸ்ரேயாஷ் ஐயர் தலைமைத் தாங்கவுள்ளார். 

அத்துடன் துருவ் ஜூரல் உப அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். 

சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டியும் இந்திய குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கே.எல். ராகுல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் இரண்டாவது போட்டியில் மட்டுமே விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அவர்கள் அணிக்கு திரும்பும் போது எந்த இரண்டு வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வௌியிடவில்லை. 

இந்திய ஏ மற்றும் அவுஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி செப்டம்பர் 16 ஆம் திகதியும், இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 23 ஆம் திகதியும் லக்னோவில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாம் பின்வருமாறு, 

Shreyas Iyer (capt), Abhimanyu Easwaran, N Jagadeesan (wk), Sai Sudharsan, Dhruv Jurel (vice-capt, wk), Devdutt Padikkal, Harsh Dubey, Ayush Badoni, Nitish Kumar Reddy, Tanush Kotian, Prasidh Krishna, Gurnoor Brar, Khaleel Ahmed, Manav Suthar, Yash Thakur, KL Rahul*, Mohammed Siraj* 

(*) இரண்டாவது போட்டியில் மாத்திரம் இடம்பெறும் வீரர்கள்

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…