இலங்கை

பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூடு

கொழும்பு – பொரளை பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் 10 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டு தமன காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 07.08.2025 அன்று பொரளை காவல்துறை பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மூவரைக் காயப்படுத்திய குற்றம் குறித்து ஜயவர்தனபுர காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.

அதன்படி, நேற்று (12) மதியம் தமன காவல்துறை பிரிவில் இந்தக் குற்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை அந்தப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், 2015 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…