இலங்கை

மலையகத்துக்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (19) தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தடம்புரண்ட ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் மேலும் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. 

இதனால் இன்று காலை 07 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ரயில் மீள் தடமேற்றும் நடவடிக்கையில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், மேலும் இரண்டு ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, மதியம் 12.40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயாவுக்குச் செல்லும் ரயிலையும், பிற்பகல் 03.00 மணிக்கு கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் கடுகதி ரயிலையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நேற்று மதியம் ரயில் மார்க்கத்திற்கு அருகில் ஒரு சிறிய மண்சரிவு ஏற்பட்ட நிலையில், ரயில் தடம் புரண்டது. 

பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மலையகத்துக்கான ரயில் சேவைகளை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…