இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு – எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தப்பட்டுள்ளது. 

தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

இந்தத் தவிசாளர் என்பவர் மக்கள் பிரதிநிதியொருவராவார். மக்கள் பிரதிநிதிகளால் கூட பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாவிட்டால், இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…