No products in the cart.
மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இன்று ஆரம்பம்
மகளிர் உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று (29) முதல் ஆரம்பமாகவுள்ளது.
முதல் அரையிறுதிப் போட்டி இன்று (29) இங்கிலாந்து மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை (30) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.















