இலங்கை

பிக்குணியை திட்டி மிரட்டிய இருவர் கைது

பிக்குணி ஒருவரைத் திட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு (02) சந்தேக நபர்களை வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அந்த இரண்டு நபர்கள் பிக்குணியை திட்டி மிரட்டும் சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இந்த சம்பவம் நேற்று (02) இரவு வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகில் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 67 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் இன்று (03) வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…