இலங்கை

வெல்லவாயவில் சிறுத்தை ஒன்று சுட்டுக்கொலை

அழிந்துவரும் அரிய வகை இனத்தைச் சேர்ந்த சிறுத்தை ஒன்று, புதுருவாகல நீர்த்தேக்கப் பகுதிக்குள் உள்ள மீகல் ஆர பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. 

வெல்லவாய வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி, அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

அத்துடன் சந்தேகநபர்கள் சிறுத்தையைக் கொன்றதன் பின்னர் அதன் பற்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…