No products in the cart.
தங்கத்தின் விலை உயர்வு!
இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை நேற்று 04 ஆம் திகதி மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிக் கொள்கையால் ஏற்பட்ட பரந்த சந்தை விற்பனை தங்க வர்த்தகர்களைப் பாதித்ததால், தங்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உச்சத்தை எட்டியுள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 246,000 ரூபாவாவும் . அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலை 227,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மார்ச் 1ஆம் திகதி 24 கரட் தங்கத்தின் விலையானது 245,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 226,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 3,103.98 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.