கால்பந்துவிளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதிப் பெற்ற போர்த்துகல்!

23-வது ‘பிபா’உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. 

23-வது ‘பிபா’ உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இடம்பெறவுள்ளது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். 

கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 

இந்நிலையில், உலகக் கிண்ண தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்த்துகல் மோதின. 

இதில் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி போர்த்துகல் அபார வெற்றிபெற்றது. 

அணியின் தலைவர் ரொனால்டோ இல்லாமலேயே அர்மீனியாவை போர்த்துகல் வீழ்த்தியது. 

ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்ட் வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

எனினும் இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கு போர்த்துகல் அணி தகுதி பெற்றுள்ளது. 

அத்துடன் 6வது முறையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…