இலங்கை

ரந்தம்பே – மஹியங்கனை மின் பரிமாற்றக் கட்டமைப்பு வழமைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்திருந்த ரந்தம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. 

நேற்று மாலை 5.30 மணியளவில் இக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து மஹியங்கனை மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சீரற்ற காலநிலையால் குறித்த மின் பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் மின்வடங்களில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…