இலங்கை

அனர்த்தங்களால் 4500 வீடுகள் முழுமையாக சேதம்!

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம் மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 1800 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 

அந்த மாவட்டத்தில் 13,044 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதற்கு அடுத்ததாக புத்தளம் மாவட்டத்தில் 573 வீடுகள் முழுமையாகவும் 4696 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

குருநாகல் மாவட்டத்தில் 480 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும் 7291 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளன. 

கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகள் முழுமையாகவும், 11,575 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

நுவரெலியா மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாகவும் 453 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…