இலங்கை

இந்தியாவின் கோவாவில் பிரபல விடுதியொன்றில் தீப்பரவல் – 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கோவாவின் கடலோரப் பகுதியில் உள்ள பிரபலமான இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள விடுதியில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .

இதேவேளை சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதன்போது பாதிக்கப்பட்ட மேலும் அறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…