இலங்கை

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின், பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்களும் மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பான ரிவோல்வர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இன்று (08) அதிகாலை வேளையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…