இலங்கை

வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் – கொழும்பு , கண்டி வீதியின் கிரிபத்கொடை ஊடான போக்குவரத்து தடை

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…