இலங்கை

முச்சக்கர வண்டி விபத்தில் 36 வயதுப் பெண் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) இடம்பெற்ற இந்த விபத்து, இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10 ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ளது. 

முலனகந்த பகுதியில் இருந்து சமகி மாவத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இமதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…