இலங்கை

அதிவேக வீதியில் விசேட சோதனை: சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் ஊடாகப் பயணித்த அனைத்து வாகனங்களும் இன்று (18) காலை விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதியில் 45 சட்டவிரோத மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன், முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்திய நபர்களுக்கு எதிராகவும் பொலிஸார் இதன்போது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…