இலங்கை

வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். 

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன. 

ஆனால், இந்த அளவு 2025 ஆம் ஆண்டில் 23,692 கிலோகிராம் 307 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், இது (2024 உடன் ஒப்பிடுகையில்) சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…