இலங்கை

கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறும், அந்தப் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான குறித்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். 

இதன் காரணமாகவே வைத்தியர்கள் தமது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். 

தற்போது கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…