இலங்கை

பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…