இலங்கை

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நடப்பாண்டில் ஏப்ரல் 1 முதல் 9 வரை இலங்கைக்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை குறிக்கின்றது. இலங்கையில் தினசரி வருகை 5,634 முதல் 6,934 வரை இருந்தது, ஏப்ரல் 5 அன்று அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

ஜனவரி முதல் ஏப்ரல் 9 வரை, இலங்கை 7,78,843 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் 2025க்கான சுற்றுலா வருவாய் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 104.8 பில்லியன்) எட்டியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 4.6% அதிகரிப்பையும், ஆண்டுக்கு ஆண்டு ரூபாய் அடிப்படையில் 4.6% அதிகரிப்பையும் பிரதிபலிக்கிறது. 

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த வருவாய் இப்போது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.4% அதிகமாகுமென குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…