இலங்கை

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நடப்பாண்டில் ஏப்ரல் 1 முதல் 9 வரை இலங்கைக்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை குறிக்கின்றது. இலங்கையில் தினசரி வருகை 5,634 முதல் 6,934 வரை இருந்தது, ஏப்ரல் 5 அன்று அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

ஜனவரி முதல் ஏப்ரல் 9 வரை, இலங்கை 7,78,843 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், மார்ச் 2025க்கான சுற்றுலா வருவாய் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 104.8 பில்லியன்) எட்டியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 4.6% அதிகரிப்பையும், ஆண்டுக்கு ஆண்டு ரூபாய் அடிப்படையில் 4.6% அதிகரிப்பையும் பிரதிபலிக்கிறது. 

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த வருவாய் இப்போது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது, இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.4% அதிகமாகுமென குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…