No products in the cart.
புதிய வரிச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில்!
வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 2025-05-19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















