இலங்கை

105 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பளை பகுதியில் 30 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று (12) பளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது. 

14 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்ஞாவின் பெறுமதி 105 இலட்சம் ரூபாவாகும். 

எனினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை. 

இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…